பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

Online Tamil Tools

Online Tamil Tools

http://tamil.changathi.com/

Is it the true meaning of the Christmas?

The most awaited season of the year, the most important event of the year is here. Celebrating Christmas has become a major tradition in all our cultures. Of course Christmas is important, because that is when our savior Jesus Christ was born. But the question is “do we spend Christmas in a meaningful way?”

Christmas has become a season where we do shopping, throw extravagant parties to show our friends and colleagues our statues, we spend money on unaffordable amounts of materialistic gifts, and liquor has become an important part in our parties. Is it the true meaning of the Christmas? No, definitely no.

We have forgotten that Jesus came to this earth to save sinners’ souls and to give redemption to the oppressed. We often forget that He himself was born to a poor family, in a stable; not in a luxury hotel or a   highly decorated house. The first visitors were poor and marginalized shepherds in the Jewish society. We Christians tend to forget that it was the beginning of a mission to save the world. It has become a Birthday party celebrated without the Birthday Boy!

Do we remember our oppressed brother’s and sisters? Are we sensitive to the needs of the poor? how many times do we spend money on meaningless goods. It is time to reflect on our own lives, to seek the real meaning of Christmas and celebrate it in a meaningful way rather than celebrating in a traditional way. Let’s step out of our own boxes and start thinking differently. Let’s be sensitive to others and give them gift of Joy, love peace, justice and acceptance just as Jesus became flesh and blood to save our souls. Think a minute and make a difference.


“Christmas is not in tinsel and lights and outward show. The secret lies in an inner glow. It is lighting a fire inside the heart. Good will and joy a vital part. It is higher thought and a greater plan. It's glorious dream in the soul of man.”

Facebook ல் தினமும் ஒரு நற்செய்தி ....

வேதாகமமே என் சத்தியம்! 


வேதாகமமே என் சத்தியம்! 


பார்வையிடுங்கள்! வாலிபர்களே! உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்! 

(இது ஒரு நட்பிற்கான விளம்பரம்)

கிறிஸ்மஸ் ஆயத்தங்களுக்காக ஜெபிப்போம்.


கிறிஸ்மஸ் கொண்டாட்ட நாட்களுக்காக ஆயத்தப்படும் இவ் உலக மக்களுக்காக ஜெபிப்போம்.

வரப்போகின்ற நாட்கள் கிறிஸ்துவை உலக மக்கள் அறிந்துகொள்ளும் நாட்களாக இருக்கவேண்டுமெனவும் அவ்வாறாக இந்நாட்களை தேவ பிள்ளைகள் பயன்படுத்த உரிய ஞானத்தை வேண்டி நிற்போமாக.

இதோ அவர் வாசலருகே வந்துவிட்டார்!

கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தப்படுவோமா?

இதுதான் காலம்.

'உலகமெங்கும் போ!
சுவிஷேசத்தை அறிவி!
சொல்லிவிட்டுப் பரமேறிச் சென்றார் நமதாண்டவர்.
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய
இதுதான் காலம். 
இக்காலமே நமது நேரம்.
இந்நேரத்தை ஆண்டவருக்கென்று செலவழிப்போமா?’

வை திஸ் குடிவெறி...?

அன்று மேய்ப்பர்கள் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தபோது தேவ தூதர்களின் திரள் கூட்டம் வந்து அழகான பாடல்களை பாடி கிறிஸ்துவை அறிவித்தனர். தேவ நாமம் மகிமைப்பட்டது. 

இன்று திருச்சபை மந்தைகளை மேய்க்க வேண்டிய ஆயர்மாரின் கூட்டத்திலே சில கறுப்பு ஓநாய்கள் மோசமான குடிகார குத்தாட்டம் போட்டு மந்தைகளை ஏமாற்றி வருகின்றனர். தேவ நாமம் இவர்கள் வாழ்வில் மகிமைப்படுமா? 

Description: https://lh6.googleusercontent.com/proxy/64vff_EG088cZXKsvqMgXK7EqaOaTpuGgKiuegYp7Bh1rA9GGjhcO5-a31xRvIl1G58GhfxAtgwdZPv17gSu2gHXQ0KzeZ5mUwo(இது யாரோ ஒருவரினால் 23 ம் சங்கீதத்தை தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும். வாசித்து எச்சரிக்கையடைவீர்களாக!) 


Description: https://lh6.googleusercontent.com/proxy/64vff_EG088cZXKsvqMgXK7EqaOaTpuGgKiuegYp7Bh1rA9GGjhcO5-a31xRvIl1G58GhfxAtgwdZPv17gSu2gHXQ0KzeZ5mUwoநம் குடிகார ஆயர்கள் பாடும் 

23ம் கீதம்

"குடிவெறி" என் மேய்ப்பனாயிருக்கிறான்நான் "விருத்தி"யடையேன்.

2. அவன் என்னைக் "கள்"ளுள்ள இடங்களில் மேய்த்து, "மயக்கும்
தண்ணீர்களண்டையில் என்னைக்கொண்டுபோய் விடுகிறான்.

3. அவன் என் ஆத்துமாவைக் "கெடுத்து" தன்னுடைய வற்புறுத்தலினிமித்தம் 
என்னை "போதையின் பாதை"களில் நடத்துகிறான்.

4. நான் நரக இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், 
"தடுமாற்றத்துக்குப்" பயப்படேன்: 
மதுவே, நீ என்னோட கூட இருக்கிறாய்
உனது "நாற்றமும் டேஸ்ட்(Taste)டும்எனக்குப் பிடிக்கும்.

5. என் குடும்பத்துக்கு என்னாலே நீ "அவமானத்தை" ஏற்படுத்தி
என் உடலை "அசிங்கத்தால்அபிஷேகம் பண்ணுகிறாய்
என் "நிர்வாணம்" அப்படியே தெரிகிறது.

6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் வறுமையும்வியாதியும் 
என்னைத் தொடரும்
நான் டாஸ்மாக்கடையிலே நீடித்த நாட்களாய் குடியிருப்பேன்!


பாடம்:
திராட்சை ரசம் பரிகாசஞ் செய்யும்
மதுபானம் அமளி பண்ணும்அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்லன் 
Description: https://lh6.googleusercontent.com/proxy/64vff_EG088cZXKsvqMgXK7EqaOaTpuGgKiuegYp7Bh1rA9GGjhcO5-a31xRvIl1G58GhfxAtgwdZPv17gSu2gHXQ0KzeZ5mUwoமதுபானத்தை விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை
-மதுபான பிரியரும்மாமிசப் பெருந்தீனிக்காரரும், - போஜனப்பிரியரும் தரித்திரராவார்கள்
மதுபானம் மெதுவாக இறங்கும்முடிவிலே அது - விரியனைப்போல் தீண்டும்
சாராயத்தைக் - குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ
ஆசாரியனும் தீர்க்கதரிசியும்(கூட) மதுபானத்தால் மதிமயங்கி - மோசம் போய் - இடறுகிறார்கள். 
- (ஒன்றுக்கொன்று உறவினர்களானவேசித்தனமும்-மதுபானமும் இருதயத்தை மயக்கும் 
மதுபானம்பண்ணுவோர் அக்கிரமஞ் செய்வார்கள் 
துன்மார்க்கத்துக்கேதுவான மதுபான வெறிக் கொள்ளாமல்ஆவியினால் நிறைந்திருங்கள்!. 


(நீதி 21:1. 21:17. 23:20,21,31,32. ஏசா 5:11. 28:7. ஓசி 4:11. ஆப 2:5. எபேசி 5:18)



நன்றி ஜாமக்காரன்

நம் வாழ்க்கை தேவனின் ஒரு பரம திட்டத்திலொன்றாகும்.

உங்கள் வாழ்க்கையானது ஒரு ஆச்சரியமான நதி போன்று தீடீர் திரும்பம் நிறைந்ததல்ல. அது பரம திட்டமாகும். உங்கள் வாழ்க்கையானது நமது தேவனின் பரம திட்டத்திலொன்றாகும். சரி. தினமும் ஒரு நற்செய்தி யில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? பகிர்ந்துகொள்ளுங்கள்! 

www.facebook.com/GoodNewsDailytamil நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

களிமண் பாத்திரம்

"ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு@ அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு." (2 தீமோத்தேயு 2:20-22)

எஜமான் பயன்படுத்தும்படியாகப் பாத்திரத்தை தேடினார் "என்னை
பயன்படுத்தும்" என்றது பொற்பாத்திரம் "

அவருக்கு முன்பாக் அனேக பாத்திரங்கள் இருந்தன
அவர் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறார்?

நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத்
தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். (1Corinthian1:27-29)

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்,நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8)

இயேசுவே நீர் தேவனுடைய பரிசுத்தர்! Jesus of Nazareth is the Holy One of God!


"நசரேயனாகிய இயேசுவே, உம்மை இன்னார் என்று அறிவேன்,
 நீர் தேவனுடைய பரிசுத்தர்" என மாற்கு 1:24 ல் ஒரு மனுஷன் மிகுந்த சத்தமிட்டு 
அறிக்கையிடுவதைக் காண்கின்றோம். 

இயேசுவை அவன் இன்னார் என அவன் அறிக்கைசெய்தான். 
இயேசுவை அறிந்த நானும் நீயும் அவரை எவ்விதமாக அறிக்கை செய்கின்றோம்? இன்றைய நாளிலே ஒருவிசை சிந்தித்துப் பார்ப்போமா? 

இயேசுவே நீர் தேவனுடைய பரிசுத்தர்! நசரேயனாகிய இயேசுவே நீரே எங்களுக்கான நற்செய்தி!

இயேசுவே நீர் தேவனுடைய பரிசுத்தர்! 

Jesus of Nazareth is the Holy One of God!

சத்திய வசனம்.....

  •  சத்திய வசனத்தை கேட்டதினால் 
     விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே
     சத்தியமும் வார்த்தையும் என்பதை
     விசுவாசிக்க தொடங்கினேன்.


  •  சத்திய வசனத்தை வாசித்ததினால்
     அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே
     நித்திய தேவனும் ராஜாதிராஜனும்
     என்பதை அறிந்தேன்.


  •  சத்திய வசனத்தை பெற்றதினால் 
     பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே
     பாவியின் மீட்பரும் இரட்சகரும்
     என்பதை அறிந்தேன்.


  • சத்திய வசனத்தை கேட்டதினால்
     என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே
     நித்திய ஜீவனைத் தந்தார்
     சத்தியவாழ்வும் வந்தது.


  •  சத்திய வசனத்தை கேளுங்கள்
     அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்
     அன்பும் பரிசுத்தமும் தங்கும்.
     துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.


     ஆக்கம் - ரி.எல்.தாசன்


நட்பின் படிகள்

ஒவ்வொரு கற்களின் மீதும் மெதுவாக அடிவைத்து கவனமாக ஒரு ஆற்றினை கடந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு சிறுவனாக நான் இதைச் செயதுள்ளேன். சில நேரங்களில் இது மிகவும் இலகுவானது. ஆனால் அநேக தடவைகளில், கற்களின் இடைவெளி தூரமாக இருக்கு்போது, அல்லது ஆற்றினைக் கடக்க முடியாதபடி தண்ணீர் வெள்ளமாக வழிந்தோடும் போது அந்த ஆற்றினைக் க்டப்பது மிகவும் கடினமானது

அத்தகைய தருணங்களில், ஒரு ஆற்றின் நடுவே நான் தத்தளிக்த்துக் கொண்டிருக்கும்போது, எங்கே செல்வது என வழிதெரியாமல் ஒரு சிறிய கல்லின் நடுவே தடுமாறிக் கொண்டிருக்கும்போது வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பு மிக்கவர்கள் நண்பர்களே என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்

பாருங்கள். ஒரு சிறந்த பாதையை தெரிவு செய்யும்படி நண்பர்கள் நமக்கு தைரியத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நாம் நிலைதடுமாறாது நிற்பதற்கும் நண்பர்களே எமது கைகளைப் பற்றிப் பிடித்து எம்மை நிலைநிறுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆற்றினைக் கடந்து முடிக்கும்வரை நானும் எனது நண்பனுக்கு அவ்வாறே உதவிகளைச் செய்யக் கூடியவனாக இருப்பேன்

உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் நண்பர்களைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானது, உங்கள் நலனுக்காக பாடுபடுபவர்களும், நீங்கள் நெறிதவறி நடக்கும்போது நல்வழிப்படுத்துபவர்களாகவும் நண்பர்கள் இருக்கும்பொழுதுதான் கால்கள் தடுமாறாமல் வாழ்க்கையெனும் ஆற்றினை கடந்து செல்லக்கூடியதாக இருக்கும்

ஞானமாக நண்பர்களைத் தெரிவு செய்யுங்கள்
நான் வளரும்போது, வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டுமானால், சிறப்பான நண்பர்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டு கொண்டேன். ஆகவே இக்கட்டுரையின் ஊடாக, சிறந்த நண்பர்களை வைத்திருப்பதற்கு தேவையான நட்பின் நான்கு முக்கிய படிகற்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

முதலாவது நான் கூறவிரும்பும் காரியமானது, சிறந்த நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டுமானால், சிறப்பான நண்பராக நீ மாற வேண்டும். வேதாகமம் கூறுகின்றபடி, நீதிமொழிகள் 18:24 இல்சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு“. ஆகவே, இந்த அளவுகோலின் அடிப்படையில் உங்கள் நண்பர்களை நோக்கிப் பார்க்கும் அதேவேளையில் அவர்களுக்கு நீங்கள் யார் என்பதைக் குறித்தும் நினைவில் வைத்திருங்கள்

நல்ல நண்பர்கள் எல்லா நேரத்திலும் நேசிப்பார்கள்
1 பேதுரு 4:8 இல்அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்ஒருவர் செய்கின்ற காரியத்தை வைத்து அவர் உங்களுடன் நண்பராகவோ உங்களை நேசிக்கவோ முடியாது. நண்பர் இல்லாத நேரத்திலும் அவரை நேசிக்கக்கூடியவராகவே நல்ல நண்பர்கள் இருப்பார்கள்சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தபோதிலும் உண்மையான நண்பர்கள் எப்பொழுதும் எல்லா நேரத்திலும் நேசிக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள்

நல்ல நண்பர்கள் எப்பொழுதும் உற்சாகப்படுத்துவார்கள் 
ஒரு சிலருக்கு எதிலாகிலும் அதிர்ஷ்டம் அடித்தவுடன் அவர்களைச் சூழ அநேகநண்பர்கள்மொய்த்து விடுவார்கள் அதற்கு முன்னர் அவர்கள் நண்பர்களாக பழகியிருந்திருக்கவே மாட்டார்கள். இதனைத்தான் நீதிமொழிகள் 19 : 6 ஆம் வசனம் கூறுகிறது. “பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்“ எனினும் நல்ல நண்பர்கள் தங்கள் நண்பர்களால் இலாபம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பழகமாட்டார்கள். அவர்கள் உங்களுடைய நட்பினை எதிர்பார்ப்பதற்குக் காரணம், ஏதேனும் இலாபம் பெறும் நோக்கமாக இருக்குமாயின், அல்லது ஏதேனும் தீய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இருக்குமாயின் அவர்கள் ஒருபோதும் நல்ல நணர்களாக இருக்க முடியாது. ஆகவே, உங்கள் நட்பினை பெறுவதற்காக பிறர் காத்திருக்கும்படி நடந்து கொள்ளாமல், நட்பு தேவைப்படும் ஒரு சிலரை உங்களுடைய சிறந்த நண்பர்களாகத் தெரிந்தெடுத்துக் கொளளுங்கள். ஏதேனும் ஒரு வழிமுறையில் அவர்களுக்குச் சேவை செய்ய முற்படுங்கள். சுயநலத்துடனான வாஞ்சையிலும் பேராசையிலும் பார்க்க, சுயநலமற்ற சேவை மனப்பான்மையுள்ளவராக மற்றவர்களால் நல்ல நண்பராக தேர்ந்தெடுக்கப்படத்தக்கவராக உங்களை மாற்றிக் கொள்ளுஙகள்

நல்ல நண்பர்கள் நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 27:6 கூறுகிறது  “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்“ ஒரு சிறந்த நண்பனாக இருக்க விரும்புகின்றவன் தன்னுடைய சிநேகிதனுடைய வாழ்க்கையில் தேவையிலலாமல் தலையிட மாட்டான்நண்பத்துவத்தின் சிறந்த தன்மையானது ஒருவருக்கொருவர் நேர்மையுள்ளவர்களாக இருப்பதேயாகும். இதைச்செய்வதற்கு உரிய எல்லா முயற்சிகளையும் எடுப்பவனே சிறந்த நண்பனாக இருக்க முடியும். ஒரு தலைசிறந்த மருத்துவர் தனது நோயாளியைக் குணமாக்கும்படியாக வருத்தம் தந்தாலும் உரிய மருத்துவச் சிகிச்சையை செய்வார். அவ்வாறே சிறந்த நண்பரும் தன்னுடைய நண்பரின் நலனுக்காக வேதனையான அணுகுமுறையையும் கையாளுவார்

நல்ல நண்பர்கள் சிறப்பானதை நம்புவார்கள்
உங்கள் நண்பர்களைக் குறித்து எதிர்மறையான தீயக் காரியத்தை நீங்கள் கேள்விபடுவீர்களாயின், நீங்கள் சொல்லவேண்டிய முதலாவது காரியம். “அது உண்மையாக இருக்க முடியாதுஎன்பதே. உண்மை இன்னதென்பதை அறியும்வரை நல்ல நணபன் ஒருபோதும் தீய எதிர்மறையான காரியத்தை நம்பப்போவதில்லை. 1 கொரிந்தியர் 13: 6 ம் வசனம் கூறுகிறதுஅன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்“ 

நல்ல நண்பர்களைத் தெரிந்தெடு
இக்கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு அநேக சிறந்த நல்ல நண்பர்கள் இல்லாவிட்டாலும், இன்றே உங்களுக்கென நண்பர்களைச் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்! நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் நண்பர்களாக இருக்கக்கூடுமா? அவர்களை போய்ச் சந்தியுங்கள். இதைச் செய்யும்போது, சகோதரனைக் காட்டிலும் நெருக்கமாக உங்களைச் சிநேகிப்பவர்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டாரத்தைச் சுருக்காதீர்கள்

நீங்கள் பற்றிப் பிடித்திருக்கத்தக்க நல்ல நண்பர் இயேசு ஒருவரே. சிறந்த நட்புக்கான முன உதாரணம் அவர் ஒருவரே. அந்த மேலான நட்பினை நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 (கட்டுரையாசிரியர் வுட்ரோ குரோல்)