பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

சத்திய வசனம்.....

  •  சத்திய வசனத்தை கேட்டதினால் 
     விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே
     சத்தியமும் வார்த்தையும் என்பதை
     விசுவாசிக்க தொடங்கினேன்.


  •  சத்திய வசனத்தை வாசித்ததினால்
     அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே
     நித்திய தேவனும் ராஜாதிராஜனும்
     என்பதை அறிந்தேன்.


  •  சத்திய வசனத்தை பெற்றதினால் 
     பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே
     பாவியின் மீட்பரும் இரட்சகரும்
     என்பதை அறிந்தேன்.


  • சத்திய வசனத்தை கேட்டதினால்
     என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே
     நித்திய ஜீவனைத் தந்தார்
     சத்தியவாழ்வும் வந்தது.


  •  சத்திய வசனத்தை கேளுங்கள்
     அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்
     அன்பும் பரிசுத்தமும் தங்கும்.
     துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.


     ஆக்கம் - ரி.எல்.தாசன்