இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழ்க்கை இல்லை!
பிறருக்காக வாழ்!
''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!
சத்திய வசனம்.....
சத்திய வசனத்தை கேட்டதினால்
விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே
சத்தியமும் வார்த்தையும் என்பதை
விசுவாசிக்க தொடங்கினேன்.
சத்திய வசனத்தை வாசித்ததினால்
அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே
நித்திய தேவனும் ராஜாதிராஜனும்
என்பதை அறிந்தேன்.
சத்திய வசனத்தை பெற்றதினால்
பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே
பாவியின் மீட்பரும் இரட்சகரும்
என்பதை அறிந்தேன்.
சத்திய வசனத்தை கேட்டதினால்
என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே
நித்திய ஜீவனைத் தந்தார்
சத்தியவாழ்வும் வந்தது.
சத்திய வசனத்தை கேளுங்கள்
அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்
அன்பும் பரிசுத்தமும் தங்கும்.
துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.
ஆக்கம் - ரி.எல்.தாசன்
Newer Post
Older Post
Home