அன்று மேய்ப்பர்கள் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தபோது தேவ தூதர்களின் திரள் கூட்டம் வந்து அழகான பாடல்களை பாடி கிறிஸ்துவை அறிவித்தனர். தேவ நாமம் மகிமைப்பட்டது.
இன்று திருச்சபை மந்தைகளை மேய்க்க வேண்டிய ஆயர்மாரின் கூட்டத்திலே சில கறுப்பு ஓநாய்கள் மோசமான குடிகார குத்தாட்டம் போட்டு மந்தைகளை ஏமாற்றி வருகின்றனர். தேவ நாமம் இவர்கள் வாழ்வில் மகிமைப்படுமா?
1 "குடிவெறி" என் மேய்ப்பனாயிருக்கிறான்: நான் "விருத்தி"யடையேன்.
2. அவன் என்னைக் "கள்"ளுள்ள இடங்களில் மேய்த்து, "மயக்கும்"
தண்ணீர்களண்டையில் என்னைக்கொண்டுபோய் விடுகிறான்.
3. அவன் என் ஆத்துமாவைக் "கெடுத்து" தன்னுடைய வற்புறுத்தலினிமித்தம்
என்னை "போதையின் பாதை"களில் நடத்துகிறான்.
4. நான் நரக இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்,
"தடுமாற்றத்துக்குப்" பயப்படேன்:
"தடுமாற்றத்துக்குப்" பயப்படேன்:
மதுவே, நீ என்னோட கூட இருக்கிறாய்:
உனது "நாற்றமும் டேஸ்ட்(Taste)டும்" எனக்குப் பிடிக்கும்.
உனது "நாற்றமும் டேஸ்ட்(Taste)டும்" எனக்குப் பிடிக்கும்.
5. என் குடும்பத்துக்கு என்னாலே நீ "அவமானத்தை" ஏற்படுத்தி,
என் உடலை "அசிங்கத்தால்" அபிஷேகம் பண்ணுகிறாய்:
என் "நிர்வாணம்" அப்படியே தெரிகிறது.
என் "நிர்வாணம்" அப்படியே தெரிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் வறுமையும், வியாதியும்
என்னைத் தொடரும்:
நான் டாஸ்மாக்கடையிலே நீடித்த நாட்களாய் குடியிருப்பேன்!
என்னைத் தொடரும்:
நான் டாஸ்மாக்கடையிலே நீடித்த நாட்களாய் குடியிருப்பேன்!
பாடம்:
- திராட்சை ரசம் பரிகாசஞ் செய்யும்:
- மதுபானம் அமளி பண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்லன்
-மதுபான பிரியரும், மாமிசப் பெருந்தீனிக்காரரும், - போஜனப்பிரியரும் தரித்திரராவார்கள்.
- மதுபானம் மெதுவாக இறங்கும்: முடிவிலே அது - விரியனைப்போல் தீண்டும்!
- சாராயத்தைக் - குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
- ஆசாரியனும் தீர்க்கதரிசியும்(கூட) மதுபானத்தால் மதிமயங்கி - மோசம் போய் - இடறுகிறார்கள்.
- (ஒன்றுக்கொன்று உறவினர்களான) வேசித்தனமும்-மதுபானமும் இருதயத்தை மயக்கும்
- மதுபானம்பண்ணுவோர் அக்கிரமஞ் செய்வார்கள்
- துன்மார்க்கத்துக்கேதுவான மதுபான வெறிக் கொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருங்கள்!.
(நீதி 21:1. 21:17. 23:20,21,31,32. ஏசா 5:11. 28:7. ஓசி 4:11. ஆப 2:5. எபேசி 5:18)
நன்றி ஜாமக்காரன்