பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

உங்கள் தரத்தை அறிந்துகொள்ளுங்கள்.

எனது இருதயத்திலுள்ள தராதரம்

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22-23)

ஒரு பொருளின் கவர்ச்சியானது அதன் குணாதிசய தரத்தில் உள்ளது. உதாரணமாக, ஒரு புதிய தொலைபேசியை தெரிந்தெடுத்தல், அதற்குhpய குணாதிசய தராதரம் என்னென்ன என்பதை நீங்கள் அறிய விரும்புவீர்கள். எல்லாவித வசதிகளும் அதிலுள்ளதா என அறிய விரும்புவீர்கள்.

கிறிஸ்துவுக்குள் உங்கள் வாழ்க்கைப் பயணத்திலே, ஒருசில காரியங்கள் உங்கள் தராதரமாக அமைந்துள்ளது. உங்களுக்குள் எதை வைத்திருக்கின்றீர்கள்? உங்கள் ஆவிக்குள் பெற்றுக்கொண்ட புதிய வாழ்க்கையின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கின்றது?

நீங்கள் தேவனுடைய கையினால் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறீர்கள் (எபேசியர் 2:10), ஒருசில விசேஷித்த தரம் உங்களிடத்தில் மாத்திரமேயுண்டு. அவையாவன, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இவைகளே புதிதாக்கப்பட்ட மனித ஆவியின் ‘தராதரங்களாகும். மேலேயுள்ள வசனத்திலே “கனிகள்” என்று குறிப்பிடப்படும் சத்தியமானது, உங்கள் வாழ்வில் விருத்தி செய்ய வேண்டிய காரியங்களாகும்! அதன் வல்லமையையும் பயன்பாட்டினையும் நீங்கள் பெருக்கச் செய்யலாம்!

அநேக மக்கள் தங்களுடைய கருவிகளின் பயன்பாட்டு தரத்தைப் பற்றி அக்கறைக்கொள்வதில்லை. அநேகமாக அடிப்படை விடயத்தையே அவர்கள் பயன்படுத்துவார்கள். ஆகவே அந்தக் கருவியின் முழுமையான திறனால் அவர்கள் களிப்படைய மாட்டார்கள். உதாரணமாக, தேவனுடைய அன்பு உங்களுக்குள் உள்ளது. அதனை எல்லா நேரத்திலும் கிரியையில் நடப்பியுங்கள். எல்லா சூழ்நிலைகளையும் அன்பு ஜெயிக்கும். ஆகவே, அன்பில் நடந்துகொள்ளுங்கள். அப்போது எப்பொழுதும் ஜெயிப்பீர்கள். காரணம் அன்பின் வல்லமையானது மகத்தான வல்லமையாக இருக்கின்றது.

இதைவிட அதிகமான தராதரங்கள் உங்களிடத்திலுண்டு. அவற்றை அறிய வசனத்தைக் கற்றுக்கொண்டு அவற்றைக் கிரியையில் நடப்பியுங்கள். 1யோவான் 4:4ல், “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” இதன் அர்த்தம் நீங்கள் உலகத்தை ஜெயிப்பவர்கள். நீங்கள் தீமைக்குரியவனையும் இருளின் தீய ஆவிகளையும் ஜெயித்துள்ளீர்கள். சகலவிதமான வாழ்வின் எதிர்மறை காரியங்களையும் ஜெயித்துள்ளீர்கள். காரணம் உங்களோடு இருப்பவர் பெரியவர்.

நீங்கள் வசனத்தைக் கற்றுக்கொள்ளும்போது, புதுப்பிக்கப்பட்ட மனித ஆவிக்குள் இருக்கின்ற அற்புதமான தராதரங்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். மகிமைக்குள்ளும் மாட்சிமைக்குள்ளும் உங்களை அழைத்த அவரைப் பற்றிய அறிகிற அறிவினால் திவ்ய வாழ்வினை நாம் வாழக்கூடியதாக இருக்கும்.

இப்போது, “நான் யார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். கிறிஸ்துவை நான் தரித்திருக்கிறேன்! எனது ஆவிக்குள் தேவனின் வாழ்வின் தாரதங்களை நான் சுதந்தரித்துள்ளேன் என்ற மனப்பான்மையோடுள்ளேன்! நான் மகிமைக்காக அழகிற்காக சிறப்பிற்காக உருவாக்கப்பட்டவன்.” என்று ஜெபியுங்கள்.

இன்றே நன்மையானவற்றை நான் வெளிப்படுத்துவேன். ஏனெனில், ஆசீர்வாத பொக்கிஷங்கள் மாத்திரமே எனது இருதயத்திலுண்டு.