பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

நீ விலையேறப் பெற்றவன்!

ஓ மனுஷனே! நீ விலையேறப் பெற்றவன்! 

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். - (ஏசாயா 43:4).

மனுஷனே, நீ தேவனுடைய பார்வையில் கனப்பெறுகின்றாய். ஏனெனில் அவர் உன்னை சிநேகிக்கின்றார். இதை உணருகின்றாயா? அவருடைய பார்வையில் நீ விலையேறப் பெற்றவன். இதை ஒருபோதும் மறந்துபோகாதே!