பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

உன் வாயை பொத்திக்கொண்டிரு....!!!

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங்கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கி விட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்தபோது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோட் அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
ந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக் குருவி மீது சாணம் போட்டு விட்டுச் சென்றுவிட்டது.
சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாண்த்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பி த்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கி விட்டது.

புனித வேதாகமம் கூறுகின்றது நீதிமொழிகள் 30:32ல்

நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து,

துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.”


இன்னொரு மொழிபெயர்ப்பில் இந்த வசனம் இவ்வாறு கூறப்படுகின்றது 

நீ வீண் பெருமைகொண்டு மூடத்தனமாக நடந்திருந்தாலும்,
தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும்,
உன் வாயை பொத்திக்கொண்டிரு!

ந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று: உன்மீது சாணம் போடுபவன் உன் எதிரி யாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்று பவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை
மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.